முகத்தை அழகாக வைக்க வேண்டும் என்பதற்காக பலவகையான க்ரீம்களை பயன்படுத்துகின்றனர்.அந்தகெமிக்கல் கலந்த கிரீம்களால்(Face Cream) முகம் அந்த சமயம் அழகாக இருக்குமே தவிர நாட்கள் செல்ல செல்ல அந்த கெமிக்கல்(Chemical) இன் பாதிப்பினால் முகம் பல்வேறு பாதிப்புக்குள்ளாகிறது.இயற்கையில் கிடைக்கும் பொருள்களை பயன்படுத்துவதன் மூலம் எந்த வித பாதிப்பும் இல்லாமல் முக அழகை பராமரிக்கலாம்.
Table of Contents
உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கை(Potato) பயன்படுத்தி எப்படி முக அழகை பராமரிக்கலாம் என்று பார்க்கலாம்.உருளைக்கிழங்கு முகச் சுருக்கம்(Wrinkles) ஏற்படாமல் தடுக்க உதவும்.உருளைக்கிழங்கு பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள எண்ணெய் தன்மை(Oily Skin) நீக்கமுடியும்.உருளைக்கிழங்கு கண் கருவளையங்களை(Dark Circle) சரி செய்யும் தன்மை கொண்டது.முகத்தை வெண்மையாக்கும்(Skin Whitening) தன்மை உருளைக்கிழங்கு உண்டு.தழும்புகளை நீக்க உருளைக்கிழங்கு உதவும்.உருளைக்கிழங்கு ஜெல்( Potato Gel )எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
Potato Gel:
தேவையான பொருள்கள்:
உருளைக்கிழங்கு(Potato) – 1
கற்றாழை ஜெல்(Aloevera gel)– 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.பின்பு உருளைக்கிழங்கை தோலை நீக்குங்கள்.பின்பு உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.பின்பு உருளைக்கிழங்கு துண்டுகளை மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த கலவையில் ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கு பேஸ்டை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்.பின்பு அதனுடன் கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் சேர்க்க வேண்டும்.இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.பின்பு அந்த ஜெல்லை முகத்தில் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.தொடர்ந்து இந்த ஜெல்லை பயன்படுத்தி வந்தால் முகம் பொலிவுடன் காணப்படும்.