உலர் தொண்டையை போக்க உதவும் 6 வீட்டு வைத்தியங்கள்
சீசன் மாறும் போது பொதுவாக ஏற்படக்கூடிய ஒன்றுதான் உலர் தொண்டை(Dry Throat) பிரச்சனை. சில எளிய வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றுவதன் மூலமாக உலர் தொண்டை பிரச்சினையை சரி செய்யலாம். சீசன் மாறும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். அந்த சமயங்களில் உலர் தொண்டை பிரச்சனை ஏற்படும். உலர் தொண்டை பொதுவாக காய்ச்சல் மற்றும் சளி போன்ற தொற்றுகளால் ஏற்படுகிறது. மேலும் இது அலர்ஜி மற்றும் தொண்டை எரிச்சல் போன்ற காரணங்களாலும் ஏற்படுகிறது. உலர் தொண்டை நீண்ட நேரம் இருக்கும் போது மெல்லுதல் மற்றும் விழுங்குவதில் சிரமத்தை ஏற்படுத்தும்.தேசிய பல் மற்றும் கிரானியோஃபேஷியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, வாயில் வறட்சி ஏற்படும் அறிகுறிகள், உதடுகளில் விரிசல், தொண்டை அரிப்பு, இருமல், வாய் புண் மற்றும் வாய் துர்நாற்றம் ஆகியவை அடங்கும்.நம்மில் பலர் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை உலர் தொண்டை. சில வீட்டு வைத்தியங்கள் வறட்சியை குறைக்க உதவும். உலர் தொண்டையில் இருந்து நிவாரணம் பெற உதவும் இந்த எளிதான வீட்டு வைத்திய முறைகளை பார்க்கலாம்.
1.துளசி மற்றும் தேன்
எங்கள் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கும் தயாரிப்புகளை நாங்கள் சேர்க்கிறோம். இந்தப் பக்கத்தில் உள்ள இணைப்புகள் மூலம் நீங்கள் வாங்கினால், நாங்கள் ஒரு சிறிய கமிஷனைப் பெறலாம்.
துளசியும் தேனும் நீண்ட காலமாக ஆயுர்வேத மருத்துவத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.வறண்ட தொண்டைக்கு, நீங்கள் ஒரு துளசி தேன் தேநீர் தயாரித்து குடிக்கலாம்.தேனின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகள் பல உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க உதவுகின்றன. துளசி உலர் தொண்டை(Dry Throat) பிரச்சினையை சரிசெய்ய பெரிதும் உதவும்.
2.மஞ்சள் பால்
மஞ்சள் பால் உலர் தொண்டை பிரச்சனை, நோய்த்தொற்றுகள் மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வளிக்கிறது. மஞ்சளை உணவில் சேர்க்கும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. ஒரு கப் சூடான மஞ்சள் பால் குடித்தால் உலர் தொண்டை பிரச்சினையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
3.நெய்
நெய் ஆன்டிபாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்களைக் கொண்டுள்ளது. நெய் தொண்டையை ஈரப்பதத்துடன் வைக்க பெரிதும் பயன்படும். நெய்யை உணவில் சேர்ப்பதன் மூலம் உலர்தொண்டை (Dry Throat)பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
4.உப்பு நீர்
வறண்ட தொண்டைக்கு சிகிச்சையளிப்பதற்கான எளிய மற்றும் மிகவும் பயனுள்ள முறைகளில் இதுவும் ஒன்றாகும்.வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது வாய் கொப்பளிக்க உடனடி பலன் கிடைக்கும். இவ்வாறு செய்வது சளி பிரச்சினையை நீக்குகிறது. மேலும் தொண்டையில் ஏற்படும் வறட்சியை நீக்குகிறது.
5.மூலிகை தேநீர்
ஏலக்காய் மற்றும் கிராம்பு போன்றவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிக அளவில் உள்ளது. இவற்றைக் கொண்டு தேநீர் தயாரித்து குடிக்கும்போது வறண்ட தொண்டை பிரச்சினை சரியாகும்.மாசு மற்றும் தூசித் துகள்களால் ஏற்படும் தொண்டை எரிச்சலைப் போக்க மூலிகை தேநீர் ஒரு சிறந்த வழியாகும்.மூலிகை தேநீர் காய்ச்சல் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
6.வெந்தய விதைகள்
வெந்தய விதைகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. வெந்தய விதைகள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை சரிசெய்ய உதவும். குறிப்பாக தொண்டை பிரச்சினையை சரிசெய்ய பெரிதும் பயன்படும்.சில விதைகளை சிறிது தண்ணீரில் ஊற்றி, அது வேறு நிறமாக மாறும் வரை கொதிக்க விடவும். பின்னர் அந்த தண்ணீரை வடிகட்ட வேண்டும். இந்த தண்ணீரை கொண்டு வாய் கொப்பளித்து வர தொண்டை பிரச்சினை சரியாகும்.
Content disclaimer
Content on this website is provided for information purposes only.Tamilneithal.com is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts, or opinions appearing in the article do not reflect the views of Tamilneithal and Tamilneithal does not assume any responsibility or liability for the same